
சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்புவது தொடர்பான ஆளுநரின் நடவடிக்கையை பார்த்துவிட்டு, தேவைப்பட்டால் சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று 110 விதியின் கீழ் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசியதாவது: "ஏழரை கோடி தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் பிரதிபலிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட ‘நீட்’ விலக்கு மசோதா, கடந்த 210 நாட்களாக கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத்தில் முடங்கிக் கிடக்கிறது. நூற்றாண்டு கண்ட தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநர் மாளிகை வளாகத்தில் கவனிப்பாரின்றி கிடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்