
சென்னை: தமிழகத்தில் அனைத்து துறை திட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தணிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிசிசி என்ற காலநிலை மாற்றம் குறித்த ஆய்வு நிறுவனம் கடந்த 6 மாதங்களில் உலக அளவில் உயர்ந்து வரும் வெப்பநிலை குறித்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை விவரங்கள் மற்றும் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில திட்டக் குழுவினருக்கு விளக்கும் நிகழ்ச்சி, ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்றது. அதில்அந்த அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தொடக்க உரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்