
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பச்சைப் பட்டு உடுத்தி மங்கல நாண், முத்து கிரீடத்துடன் சிலம்பு நாயகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்குதொடர்ச்சி மலை விண்ணேற்றி பாறை எனும் இடத்தில் மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா ஊரடங்கால் விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்