
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக சொத்து வரி உள்ளது. 24 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஓட்டுக்காக சொத்து வரியை உயர்த்துவதில் தயக்கம் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமே சொத்து வரிதான். பல நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஊழியர்களுக்கான மாத ஊதியம் சொத்து வரி வசூலித்தே வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் ஒரு மாதத்துக்கு பணியாளர்ஊதியம், ஓய்வூதிய செலவு மட்டுமே ரூ.100 கோடிக்கு மேல்செலவிடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்