
சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இதை தடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
இதையடுத்து, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில்குமார் சி.சரட்கர் தலைமையிலான போக்குவரத்து போலீஸார் தினமும் காலை, மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி, படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்