
மதுரை: மதுரை மாநகரில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் செயல்பாடு பிடிக்காமல் மாநகர நிர்வாகிகள், முன்னாள் கவுன்சிலர்கள் ஒருவர் பின் ஒருவராக மாற்று கட்சிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
அதிமுகவில் கடந்த 10 ஆண்டு அமைச்சரவையில் துறை மாற்றப்படாமல் தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் கே.ராஜூ. ஜெயலலிதா இருந்தவரை அமைச்சராக, மாநகர செயலாளராக அதிமுகவில் செல்வாக்குடன் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு மதுரை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா கட்சித் தலைமைக்கு நெருக்கமாகி அவர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாநகரில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் அவர் போட்டியிட்ட மதுரை மேற்கு தவிர மற்ற தொகுதிகளில் இவரது பரிந்துரைக்கு கட்சித் தலைமை செவி சாய்க்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்