
திருப்பூர் / ஈரோடு / சேலம் / கரூர்: நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடைத் தொழில் அமைப்புகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் நாளொன்றுக்கு சுமார் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
பின்னலாடைத் தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பது வழக்கம். நூல் விலை உட்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு, ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்