
கோவை: சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் விரைவில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பிறகு, 41-வது வார்டு ரேவதி நகர் பகுதியில் கட்டமைக்கப்பட்ட 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டம், 83-வது வார்டு ஆடிஸ் வீதியில் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்