Sunday, May 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/23/large/802911.jpgஓராண்டை நிறைவு செய்த 5 மாநில அரசுகள் | ஸ்டாலின் செயல்பாடுகளில் 85 சதவீத மக்களுக்கு திருப்தி: ஐஏஎன்எஸ் சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தகவல்

சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் 85 சதவீத மக்களுக்கு திருப்தி அளித்துள்ளதாக ஐஏஎன்எஸ் - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பதவியேற்றார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, கேரளாவில் பினராயி விஜயன், புதுச்சேரியில் ரங்க சாமி, அசாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் முதல்வராக பொறுப்பேற்றனர்.

இந்த 5 மாநிலங்களின் முதல் வர்களாக பொறுப்பேற்றவர்களின் செயல்பாடுகள் கடந்த ஓராண்டில் எப்படி இருந்தது, மக்கள் மத்தியில் அவர்களின் செயல்பாடுகளுக்கு என்ன மதிப்பு உள்ளது என்பது குறித்து ஐஏஎன்எஸ் - சி வோட்டர்ஸ் நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அந்த கருத்துக் கணிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் செயல்பாடுகளை பொருத்தவரை 30 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் மிகவும் திருப்தி அளிப்பதாகவும், 51 சதவீதம் பேர் திருப்தி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி, 81 சதவீதம் பேருக்கு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இருப்பது தெரியவந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...