
சென்னை: திருச்சி, மதுரை உள்ளிட்ட 13 மாவட்டங்களில்ரூ.2,124 கோடியில் 255 கி.மீ.இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை முதல் மாமல்லபுரம் வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலை, ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை’ என அழைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
தமிழக நெடுஞ்சாலைத்துறையின் 75-வது ஆண்டு பவளவிழா, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பவளவிழா நினைவுத்தூணை திறந்துவைத்து, விழா மலரையும், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்ட இலச்சினையையும் வெளியிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்