
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நாளை (மே 13) தொடங்கவிருந்த பிரியாணி திருவிழா மழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.
புவிசார் குறியீடு பெற: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் அசைவ உணவுகளில் பிரியாணி பிரசித்திப்பெற்றது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆம்பூர் வழியாக செல்லும் ஏராளமானோர் ஆம்பூர் பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். சாமான்ய மக்கள் முதல் பிரபலங்கள் வரை ஆம்பூர் பிரியாணியை விரும்புகின்றனர்.இந்நிலையில், ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மே 13-ம் தேதி (நாளை) முதல் வரும் 15-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை பிரியாணி திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்