
சென்னை: முதல்வர் ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வைத்து தமிழகத்தின் ஆதின மடாதிபதிகள் சந்தித்து பேசினர். பட்டினப் பிரவேச நிகழ்ச்சி நடத்த அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
தருமபுரம் ஆதினம் வரும் 22-ம் தேதி பட்டினப் பிரவேச நிகழ்ச்சி வைத்துள்ளார். அப்போது, அவரை பக்தர்கள் பல்லக்கில் வைத்து சுமந்து செல்வார்கள். இதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர், ஆதினத்துக்கு கடிதம் அளித்துள்ளார். இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்