
சென்னை: தமிழகத்தில் 18 வயதை கடந்த 94.31 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி கடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போதைய நிலையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சுகாதார, முன்களப் பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. அதேபோல, 18 வயதை கடந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண அடிப்படையில் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்