
சென்னை: குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைசார்பில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்ட Valar 4.0 (valar.tn.gov.in) இணையதளத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பவியல் துறைஅமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்