
சென்னை: ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்