
சென்னை: சனாதன தர்மம், மதம் ஆகியவற்றை ஒருபோதும் ஒப்பிடக்கூடாது. இரண்டும் வெவ்வேறானவை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் முகப்பு கட்டிடமான ‘ஏழைகளின் அரண்மனை’ மற்றும்உறைவிட உயர்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவுக்கு ராமகிருஷ்ண மடத்தின் துணைத் தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நூற்றாண்டு விழாவையொட்டி வடிவமைக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். நலிந்த நாடகக் கலைஞர்கள், துப்புரவுப் பணியாளர்கள், விதவைகளுக்கு ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆளுநர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்