
திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் விவாதத்தின்போது வீண் அரட்டை, வீடியோ பதிவு செய்வது என வழக்கத்துக்கு மாறாக நடைபெற்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் எனவும், இருக்கை ஒதுக்கீட்டை முறைப்படுத்த வேண்டும் எனவும் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளிவிழா கண்ட திருச்சி மாநகராட்சியில் மாதம் ஒருமுறை சாதாரணக் கூட்டமும், தேவைப்படும் நேரங்களில் அவசரக்கூட்டமும் நடத்தப்படுவது மரபு. மேயர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டங்களில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்று தங்களது கருத்துகள், குறைகள், கோரிக்கைகளை முன்வைப்பது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்