
சென்னை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில் ரூ.1 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.
தென்னிந்தியாவில் முதல்முறையாக, சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரகத்தில், ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற பெயரில் ரூ.1 கோடி மதிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் வகையில் செயல் விளக்க மையமாக இந்த அருங்காட்சியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாற்றுத் திறனாளிகள் தடையற்ற சூழலுடன் வசிக்கக்கூடிய ‘மாதிரி இல்லம்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்