
புதுடெல்லி/சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் கரோனா தாக்கத்தைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடை பெற்றது.
மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், "நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,329 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தினசரி கரோனா பாதிப்பு 108 நாட்களுக்குப் பிறகு 8 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 4,32,13,435-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,757-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை ஒரே நாளில் 4,103 அதிகரித்து, 40,370-ஆக உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 194.92 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்