
சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்கள், அதில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகள் உட்பட 25 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை வடபழனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆர்த்தி ஸ்கேன் மையம், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சுமார் 45 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் பல இடங்களில் புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்