
சென்னை: கோயில்கள், கோயில் மண்டபங்களில் திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு கோயில் நிதியில் இருந்து புத்தாடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘கோயில்களில் நடைபெறும் திருமணத்தைப் பொருத்தவரை, மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவர்களது திருமணத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால், மண்டபத்துக்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்’ என்று 2021-22 சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்