
சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டு ஆக்கப்பூர்வமாக இல்லை. கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பவுடர், சந்தை விலையைவிட குறைவான விலைக்கே வாங்கப்படுகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.13 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய கண் பரிசோதனை மையம், ரூ.18 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன அறுவை சிகிச்சை அரங்கம் ஆகியவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்