
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப்பாதை தோண்டும் பணிக்காக, 23 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபரில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்