
வண்டலூர்: சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 44.75 ஏக்கரில், ரூ.393.74 கோடியில், ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இது செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிகப் பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, பண்டிகை நாட்களின் போது கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால், சென்னை மக்களும், வெளியூர் செல்பவர்களும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்