
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் இ-சஞ்சீவனி திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தற்போது இ-சஞ்சீவனி சேவை திட்டம் தொடங்கப்பட்டு நல்ல முறையில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெறலாம் என்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 12 வகையான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்