
சென்னை: நடப்பு குறுவை சாகுபடியை அதிகரிக்க ரூ.61 கோடி மதிப்பிலான திட்டங்களை வேளாண் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடப்பாண்டு குறுவை நெல் சாகுபடி பரப்பை 5.2 லட்சம் ஏக்கருக்கும் மேல் உயர்த்தும் நோக்கத்தில் ரூ.61 கோடி மதிப்பில் குறுவை தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 31-ம் தேதி அறிவித்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கருக்கு யூரியா, டிஏபி உரங்கள் தலா ஒரு மூட்டையும், பொட்டாஷ் உரம் அரை மூட்டையும் முழு மானியத்தில் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ரூ.46 கோடி செலவாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்