
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் ஆனிப் பெருந்திருவிழா நடைபெறுகிறது. நேற்று காலை கோயில் உள் பிரகாரத்தில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி - அம்பாள் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் வேத மந்திரங்கள் முழங்க திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்