
கோவை: “கடந்த மாதம் 20 குவாரிகள் ஒப்பந்தப்புள்ளி மூலம் விட்டோம். அதில் அதிக தொகை ஒப்பந்தம் கோரி ஒன்றை கே.பி.முனுசாமி எடுத்துள்ளார்” என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
கீழ்பவானியில் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கோவையில் இன்று (ஜூலை 14) ஆலோசனை நடத்தினர். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்