
சென்னை/புதுடெல்லி: ஒற்றைத் தலைமை விவகாரத்தையடுத்து அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் தொடர்கிறது. எனவே, பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளபடி வரும் 11-ம் தேதி பொதுக்குழு நடக்குமா என்று தொண்டர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மனுக்கள் மீது இன்று (ஜூலை 6) விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்