
இம்பால்: மணிப்பூரில் மியான்மர் எல்லைக்கு அருகில் மோரே நகரம் உள்ளது. இந்தநகரைச் சேர்ந்த பி.மோகன் (27), எம்.அய்யனார் (28) என்ற 2 தமிழ் இளைஞர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை மியான்மரின் தாமு நகரில் உள்ள நண்பர் ஒருவரை காணச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கு மதியம் 1 மணியளவில் இவர்கள் இருவரும் துப்பாக்கிகுண்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுகுறித்து மோரே காவல்துறை அதிகாரி ஆனந்த் கூறும்போது, “தமிழ் இளைஞர்கள் கொலைக்கான விவரம் கிடைக்கவில்லை. அவர்களின் உடல்களை இங்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்