
சென்னை: தஞ்சையில் மாயமான, 300 ஆண்டுகள் பழமையான பைபிள், லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பைபிளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மத போதகர், 1682-ல் ஜெர்மனியின் சாக்சானி நகரில் பிறந்தவர். பாலே பல்கலை.யில் படித்த இவர், தூதரன் தேவாலயத்தில் மத போதகராகப் பணியாற்றினார். டென்மார்க் மன்னரின் வேண்டுகோளை ஏற்று, இவரும், கென்ரிக் என்பவரும் தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில், டச்சு காலனி வசமிருந்த பகுதியில் மதபோதகராகப் பணிபுரிய 1706-ல் இந்தியா வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்