
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று பிரதமரை வரவேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை 5.10 மணி அளவில் சென்னை வந்தார். சதுரங்க கட்ட கரை போட்ட வேட்டி, சட்டையை பிரதமர் அணிந்திருந்தார். விமான நிலையத்தில் பிரதமரை தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்