
சென்னை: சின்னசேலம் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பள்ளி மீதான கலவரம் திட்டமிட்டு நடந்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்த 16 வயதான மாணவி, பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் கலவரமாக வெடித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்