
ஈரோடு: நடிகர் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக ஒவ்வொரு முறையும் கூறி ஜகா வாங்குவது தான் அவரது வழக்கம் என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நான்காம் மண்டலம் சார்பில் 75-வது சுதந்திரதின பவள விழா மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எச்.எம். ஜாபர்சாதிக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்