
சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம், ஒரு இளம்பெண்ணுக்கு சிக்கலான மற்றும் அரிய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து புது வாழ்வு அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கணைய புற்றுநோயால் கண்டறியப்பட்ட 21 வயது பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத கட்டி கண்டறியபட்டது. பல வகையான கீமோதெரபி அளிக்கப்பட்ட பின்பும் கட்டி குறையவில்லை. பின்னர் கதிர்வீச்சு சிகிச்சைக்கு அப்பெண் உட்படுத்தப்பட்டார், என்றாலும் அதுவும் பலனளிக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்