
சென்னை: தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோரை உருவாக்க `ஒலிம்பிக் தங்க வேட்டை' என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பிரதமர் மோடி இப்போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா உள்பட 186 நாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் நேற்று முடிவடைந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்