Tuesday, August 9, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/08/10/large/837874.jpgரூ.25 கோடியில் `ஒலிம்பிக் தங்க வேட்டை' திட்டம் - செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்தில் அனைத்து விளையாட்டுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோரை உருவாக்க `ஒலிம்பிக் தங்க வேட்டை' என்ற திட்டம் ரூ.25 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும் என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சர்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. பிரதமர் மோடி இப்போட்டியைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, ஜூலை 29-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா உள்பட 186 நாடுகளைச் சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 12 நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகள் நேற்று முடிவடைந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...