
சென்னை: போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுப்பதில் கடமையை செய்யத் தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். போதைப் பொருள் தடுப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ திட்டத்தின் தொடக்க விழா, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நாட்டு நலப்பணி திட்டம், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்