
சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகில் உற்பத்தி செய்யப்பட உள்ள, தலா 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று மத்திய மின் துறைக்கு, தமிழ்நாடு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 3 மற்றும் 4-வது அலகுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், 3-வது அலகில் வரும் 2025 மே மாதமும், 4-வது அலகில் 2025 டிசம்பர் மாதத்துக்குள்ளும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்