
சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மாநில மனித உரிமை ஆணையத்தின் 25-வது ஆண்டு வெள்ளி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் விழா மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித உரிமை பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ், கன்னியாகுமரி ஆட்சியர் அரவிந்தன், மதுரை மாநகர காவல் ஆணையர் பி.செந்தில்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்