
சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு, சுதந்திர போராட்ட தியாகிகள், வீரர்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு, அமுதப் பெருவிழாவாக நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை 8.48 மணிக்கு அணிவகுப்பு வாகனங்கள் புடை சூழ, கோட்டை கொத்தளத்துக்கு வந்தார். அவரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு வரவேற்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்