
சென்னை: மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்க மத்திய அரசுடன் பகை உணர்வான அணுகுமுறை வேண்டாம் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேண்டாத செய்திகளை பரப்பும் அதிகாரிகளை களையெடுக்கவும் முடிவெடுத்துள்ளார்.
நீட் விவகாரத்தில் தமிழகத்துக்கு சாதகமாக நடக்கவில்லை, ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு வருத்தங்கள் இருந்தாலும், மத்திய அரசுடன் சுமுகமான போக்கையே தமிழக அரசு விரும்புகிறது. இதைப் பயன்படுத்தி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களையும், அதன்மூலம் போதிய நிதியையும் பெற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முயற்சிகள் செய்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்