
கோவை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கைகள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்:" எப்போதும் மக்கள் மனுக்களை கொடுக்கும்போது, ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், அதே மக்கள் என்னிடத்தில் மனுக்களை கொடுக்கும்போது, மகிழ்ச்சியோடு பூரிப்போடு, நம்பிக்கையோடு கொடுத்தவிட்டு நன்றி கூறுகின்றனர். இன்று மனுகொடுத்த பின்னர் மக்களிடத்தில் நம்பிக்கை வந்திருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்