
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில், ரூ.600 கோடி மதிப்பில் புதிய டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தலைப்பில் மதுரையில் தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் துறைச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்