
சென்னை: "விநாயகர் சதுர்த்திக்கு முதல்வர் வாழ்த்து சொல்லாததன் மூலம், தமிழகத்தில் அவர்தான் மத அரசியல் செய்கிறார் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி இருக்கிறது" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழகத்தில் முதன்முறையாக விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை அறிவித்த அரசு எது? வரலாற்றை புரட்டிப் பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.விநாயகர் சதுர்த்திக்கு முதன்முறையாக விடுமுறை அறிவித்தது திமுக அரசு, அப்போதைய முதல்வர் அண்ணா தான் அந்த அறிவிப்பை வெளியிட்டவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்