
சென்னை: தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சண்முகம் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.
சன் டிவியில் தனது கணீர் குரலில் பொறுமையாக அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளர் சண்முகம். மதுரையை பூர்விகமாக கொண்ட இவர், பத்திரிக்கை நிருபராக தனது ஊடக பணியை தொடங்கியவர், தொடர்ந்து செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். தொகுப்பாளர் பணியில் இருந்து விலகி சில காலங்களாக பேச்சாளராக தொடர்ந்து செயலாற்றி வந்தார். 90களில் பிறந்த இளைஞர்களுக்கு இவரின் குரல்வளம் பேவரைட் ஆன ஒன்று.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்