
திருவள்ளூர்: மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையொட்டி திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டு வளாகத்தில் சிவலிங்கம் வடிவிலான, அவருடைய நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
அவரது மனைவி சாவித்திரி, மகள் பல்லவி, சகோதரி சைலஜா உள்ளிட்ட குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது, எஸ்பிபி-யின் நினைவிடத்தில் வரையப்பட்டுள்ள அவரின் உருவத்தை தொட்டு வணங்கி சாவித்திரி கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அங்கு மரக்கன்றுகளை நட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்