
மதுரை: மதுரை அருகே அரசு மருத்துவமனைக்கு மருத்துவ சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகள், மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் சேர்ந்து ஆடி, பாடி மகிழ்ந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகள் என்றாலே இறைச்சல், கூட்டம், சுகாதார சீர்கேடு, தரமற்ற சிகிச்சை என்ற தவறான பிபம்பம் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையான சுகாதாரமான அடிப்படை வசதிகளில் தொடங்கி சர்வதேச தரத்திலான சிகிச்சைகள் வரை சிறப்பான சேவைகளை அருசு மருத்துவமனைகள் வழங்குகிறது. எந்த ஒரு உயிர் காக்கும் சிகிச்சையும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் வெற்றிகரமாக வழங்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்