
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கனிமொழி எம்.பி., வலியுறுத்தினார். குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இளைய ஆர்வலர்களை ஊக்குவித்தல் குறித்த கருத்தரங்கம், சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. இந் நிகழ்வில் கனிமொழி, எம்.பி பேசியதாவது:
சமூக நீதியைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுகிறோம். இதில் குழந்தைகளை பெரும்பாலும் இணைப்பதில்லை. தற்போது குழந்தையை சரியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. அவ்வாறு குழந்தைகளை சுய மரியாதையோடு, கவுரவத்தோடு, சம உரிமையோடு நடத்துவதற்கு இந்தச் சமூகம் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.அப்போது தான் அனைவருக்குமான சமூக நீதி உருவாகும். பாலியல் வன்கொடுமை அதிகரிக்க தொழில்நுட்பமே காரணம்என எளிதில் கூறிவிடலாம். முன்பெல்லாம் நடப்பதை வெளியில் கூறவே முடியாமல் குழந்தைகள் அடக்கி வைக்கப்படுவார்கள். இதனால் மனச்சோர்வோடு அவர்கள் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போதுதான் வெளிப்படையாக பல விஷயங்கள் தெரிய வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்