
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் டாக்டர் கனவை நனவாக்கி வரும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்படி இந்த ஆண்டு 569 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் தமிழக அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவராகும் கனவு வீணாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில், கடந்த 2020-ம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசு, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது. படிப்புக்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்பதாக அறிவித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்