
புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் - இடையார்பாளையம் பகுதியில் ஆலுத்தவேலி அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பார்வையிட்டார். அங்குள்ள தொழிலாளர்களிடம் பட்டாசு செய்யும் முறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை கூறியதாவது: ‘‘சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறது. புதுச்சேரியிலும் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இங்கு இதற்கு முன்பு ஆறு அல்லது ஏழு பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி அவை மூடப்பட்டுவிட்டது. ஒன்று மட்டுமே இயங்குகிறது என்று கேள்விப்பட்டேன். பாதுகாப்புடன் இதை விரிபடுத்த முடியுமா. அடுத்த தீபாவளிக்குள் அதனை செய்ய முடியுமா என்பதை அறிந்து கொள்ளவும், தொழிலாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் வந்தேன். அவர்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்